Monday 20th of May 2024 06:52:15 PM GMT

LANGUAGE - TAMIL
.
மகர சிறை வன்முறையில் உயிரிழந்தவர்களில் 9 பேருக்கு கொரோனா!

மகர சிறை வன்முறையில் உயிரிழந்தவர்களில் 9 பேருக்கு கொரோனா!


மகர சிறைச்சாயைலில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தில் உயிரிழந்த 11 கைதிகளில் 9 பேருக்கு கொரோனத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிந்தவர்களின் சடலங்களில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் நேற்று (டிச-01) மேதற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவர்களில் 9 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக ராகமை வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.

கடந்த 29 ஆம் திகதி மஹர சிறைச்சாலை கைதிகள் சிலருக்கு இடையில் அமைதியின்மை ஏற்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் 11 கைதிகள் உயிரிழந்தனர்.

இதன்போது, மேலும் 106 கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் காயமடைந்த நிலையில் அவர்களில் 29 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை, இவ்வாறு காயமடைந்த கைதிகளில் 38 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கொழும்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE